×

எளாவூர் அருகே குண்டும் குழியுமான சர்வீஸ் சாலை

கும்மிடிப்பூண்டி, நவ. 20: எளாவூர் பகுதியில்  சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எளாவூர் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை, எளாவூர், காட்டுக்கொள்ளைமேடு, நரசிங்கபுரம், சுண்ணாம்புகுளம், ராக்கம்பாளையம், ஓபசமுத்திரம், சின்னமாங்கோடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தடுமாறி விழுந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்து சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நேரில் பார்வையிட்டு, சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும். ேமலும், பழுதடைந்துள்ள ரயில்வே மேம்பால மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Boutique Service Road ,Elavur ,
× RELATED எளாவூர் சோதனைசாவடியில் 20 கிலோ கஞ்சா...