×

இந்தி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

நெல்லை, நவ. 19: விஷராத் இந்தி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா  நெல்லையில் நேற்று நடந்தது.நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு விஷாரத் இந்தி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட இந்தி பிரசாரக் சமிதி தலைவர் ராஜகோபால், நெல்லை மாவட்ட கஸ்டம்ஸ் மற்றும் ஜிஎஸ்டி  கண்காணிப்பாளர் மற்றும் மத்திய அரசின் இந்தி பிரசாரக் அலுவலர் மாரியப்பன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜ.மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில்: தாய் மொழியான தமிழக்கு முதலிடம் அளித்து விட்டு, இரண்டாவதாக இந்தி மொழியை கற்று தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் இந்தி மொழி கற்று இருந்தால் பணி எளிதாகவும், அங்குள்ளவர்களிடம் பழகவும் முடியும் என்று குறிப்பிட்டார். இதில் மாணவ, மாணவிகள் மற்றும் இந்தி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்தி பிரசாரகர்கள் மகாலட்சுமி, முத்துகுமாரி, ராசாத்தி, செண்பகவள்ளி, தீபா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்