தக்கலை, நவ.16: தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி கரும்பாறையைச் சேர்ந்தவர் அனிஷ் (25). டிப்ளமோ படித்துள்ளார். இவரது வீட்டின் அருகில் உள்ளவர் பவித்ரா (19). நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காதல் ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேற்று தக்கலை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சப் இன்ஸ்பெக்டர் பிரேமா இருவரது பெற்றோர்களையும் அழைத்து பேசினார். பின்னர் காதல் ஜோடிகளை அனிஷ் பெற்றோருடன் சேர்த்து அனுப்பி வைத்தார்.