கரூர், நவ.16: கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். கரூர் அடுத்த வீரராக்கியம் பிரிவு திருச்சி சாலையில் மணல் திருட்டு லாரிகள் செல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மாயனூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது திருட்டு மணல் ஏற்றி வந்த லாரியை பிடித்தனர். லாரியுடன் 2 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கழுகூர், சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.