கரூர், நவ.16: குடிநீர் குழாய் உடைப்பில் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்கு காவிரியாற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த பகிர்மான குழாய்களில் ஆங்காங்கே குடிநீர் கசிந்து வருகிறது. நெரூர் செல்லும் சாலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டும் சரி செய்யாததால் குடிநீர் வீணாகி வருகிறது. மழைத்ததூறல் போல தண்ணீர் பீய்ச்சிடியத்துக்கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் மட்டுமே குடிநீர் சிக்கனம் குறித்து பேசுகின்றனர். மேலும் காவியாற்றில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனினும் இதுபோன்ற குழாய் விரிசல் காரணமாக ஆங்காங்கே குடிநீர் வீணாகி வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் அவர்கள் இதுகுறித்து கேட்பார்கள். தற்போது தனி அதிகாரி பதவிக்காலம்தான் நீட்டிக்கப்படுகிறது. எனினும் அதிகாரிகள் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை. எனவே உடனடி நடவடிக்கை எடுத்து குழாய்களை மாற்றி அமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்றனர்.