×

சூளகிரி அருகே ஆசிட் லாரி கவிழ்ந்து விபத்து

சூளகிரி, நவ.16:  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஈரோட்டிற்கு ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சதீஸ் ஓட்டிச் சென்றார். சூளகிரி அருகே அழகுபாவி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த ஆசிட் சாலையில் கொட்டியது. ஆசிட் லாரி சாலையில் கவிழ்ந்ததால், இதை தொடர்ந்து பின்னால் வந்த கொண்டிருந்த லாரிகள் பிரேக் போட்டபோது, லேசாக மோதிக்கொண்டன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார், மீட்பு பணியை முடுக்கி விட்டனர். சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆசிட் என்பதால் பாதிப்பு எதுவும் இல்லை. விபத்தில் லாரி டிரைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Suluggery ,
× RELATED சூளகிரி அருகே நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு