×

காரிமங்கலத்தில் ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு நேர்காணல்

காரிமங்கலம், நவ.16: காரிமங்கலம் ஒன்றியத்தில், காலியாக உள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேற்று பிடிஓ அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பந்தாரஅள்ளி, பொம்மஅள்ளி,  எர்ரசீகலஅள்ளி, கெரகோடஅள்ளி, கோவிலூர், மொட்டலூர், புலிக்கல் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து காலியாக உள்ள ஊராட்சிகளில் செயலர்களை நியமிக்கும் பொருட்டு, நேற்று காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. நேர்காணலை சத்துணவு நேர்முக உதவியாளர் வேதவிநாயகம் தலைமை வகித்து நடத்தினார். பிடிஓ வடிவேலன் முன்னிலை வகித்தார். நேர்காணலில் 202பேர் கலந்து கொண்டனர். இதில், துணை பிடிஓக்கள் விஜயா, சம்பத் உள்ளிட்ட அலுவலர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட நேர்காணல் பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : Panchayat Secretary ,Karimangalam ,
× RELATED அரசு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை