×

டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

குஜிலியம்பாறை, நவ. 16: குஜிலியம்பாறை அருகே தோளிபட்டி கிராமம் ரெங்கபாளையம் புதூரை சேர்ந்த ஜெயராமன் மகன் கார்த்திக்ராஜா (18). கரூர் தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த 12ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். கரும்பாறைப்பட்டி அருகே வந்தபோது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கார்த்திக்ராஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கார்த்திக்ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : youngster ,tuweiler crash ,
× RELATED திருவண்ணாமலையில் கோலாகலமாக...