முத்துப்பேட்டை, நவ.15: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கலாம் கனவு இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் ஆலோசகரும் கல்விக் குழு தலைவருமான மெட்ரோ மாலிக் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் நித்தியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் செல்வசிதம்பரம் வரவேற்று பேசினார். இதில் நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆலாசகர் மருதம் செல்வம், செயலாளர் ஹாஜா, பொருளாளர் கிஷோர், திட்ட இயக்குநர் பாயிஸ், உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள்தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளிதலைமையாசிரியர் பாலு தலைமை வகித்தார். ஆசிரியை வேம்பு வரவேற்றார். திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரிசங்கதலைவர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். ரோட்டரியன் சிவக்குமார், கல்விப் புரவலர்கள் மதன், காளிதாஸ்உட்படபலர் பேசினர். மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டிகள்நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஒட்டி மாணவமாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர் அய்யப்பன் நன்றிகூறினார்.