திருத்துறைப்பூண்டி நவ.15: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் நகரஅகமுடையார்கள் சார்பில் 22ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.பின்னர் மேலவீதியில் சூரசம்ஹாரவிழாவிற்கு பின்னர் இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்திலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பிசந்திரசேகர் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.