வேப்பனஹள்ளி, நவ.15: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தனி நபர் கழிப்பறை கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மக்களுக்கான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு மேம்பாடு ஆகிய பணிகளையும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிகளின் செயலாளர் சாந்தா, உதவி இயக்குனர் சுசீலாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, இந்துமதி, மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் பலதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.