பெரம்பலூர், நவ. 15: பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமுலாக்கம்) முகமது யூசுப் தெரிவித்திருப்பதாவது: தொழிலாளர் துறையில் திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் மண்டலத்தில் காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் டிசம்பர் 2ம் தேதி காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடக்கிறது. தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு தபால் மூலம் எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு பெறப்படாத, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமுலாக்கம்) அலுவலகத்தை வருகிற 29, 30ம் தேதிகளில் அணுகி நுழைவுச்சீட்டு நகலை பெற்று கொள்ளலாம். மேலும் நுழைவுச்சீட்டு பெற நேரில் வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் நகலில் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையொட்டி ஆ பிரிவு அரசு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்றுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.