×

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

பெரம்பலூர், நவ.15: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.  பெரம்பலூர்  துறையூர் சாலையிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை, பிரம்மபுரீஸ்வரர்  கோயிலில், வள்ளி, தெய்வானை சமேத, சுப்ரமணியசுவாமி 41வது ஆண்டு கந்தசஷ்டி  சூரசம்ஹார விழா 2 நாட்கள் நடைபெற்றது. இதனையொட்டி 13ம்தேதி காலை 9 மணிக்கு  மேல் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம்  வழங்கப்பட்டது. அன்றிரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய  நிகழ்வாக நேற்று 14ம்தேதி மாலை மதனகோபால சுவாமி கோயிலில் இருந்து  திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.
 மாலை 4.30 மணிக்கு மேல் 6.30  மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.  இந்தத் திருக்கல்யாண வைபவத்தைக் காண பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை,  எளம்பலூர், சிறுவாச்சூர், மின்நகர், 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இருந்து திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வழிபட்டு  திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர்.

Tags : wedding ceremony ,Perambalur Brahmapureeswarar ,
× RELATED பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி...