×

சத்தியமங்கலம் பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

குளித்தலை,நவ.15: குளித்தலையை அடுத்த சத்தியமங்கலம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 6-ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா நடைபெற்றது. விழாவினையொட்டி கடந்த 4- ம் தேதி முகூர்த்த காலுடன் விழா தொடங்கியது.. 13-ம் தேதி 6-ம்நாளான செவ்வாய்  அன்று மாலை 6 மணிக்கு முருகப்பெருமான் சுவாமியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும், வானவேடிக்கையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7-ம் நாளான நேற்று காலை மஹாஅபிஷேகமும், 10.30 மணிக்குமேல் 12 மணிக்குள் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யான வைபவவிழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

Tags : devotees ,Sathiyamangalam Balamurugan Temple ,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது