×

ஆண்டிபட்டி வெங்கடேஸ்வரா நகைக்கடையில் பரிசளிப்பு விழா முதல் பரிசு பிரிட்ஜ்

ஆண்டிபட்டி, நவ.15: ஆண்டிபட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா நகைக்கடையில் தீபாவளியை முன்னிட்டு நகை வாங்கியவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடை உரிமையாளர் பரிசுகளை வழங்கினார். ஆண்டிபட்டி நகரில் வெங்கடேஸ்வரா நகைக்கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் அக்.18ம் தேதி முதல் நவ.5ம் தேதி வரை பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கும், கடையில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் எடுப்பவர்களுக்கு பம்பர் பரிசுகள் அறிவிக்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர். இதையொட்டி நேற்று வெங்கடேஸ்வரா நகைக்கடையில் கடை உரிமையாளர் ரமேஷ் தலைமையில் குலுக்கல் முறை நடைபெற்றது.அதில் முதல் பரிசாக பிரிட்ஜ், 2ம் பரிசு வாஷிங் மெஷின், 3ம் பரிசு எல்இடிவியும், ஆறுதல் பரிசாக 10 நபர்களுக்கு சாமுத்திரிக்கா பட்டு புடைவைகளும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 150 நபர்களுக்குகுக்கர்களை கடை உரிமையாளர் ரமேஷ் வழங்கினார்.

Tags : Antipatti Venkateswara Jewelry ,bridge ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...