×

டெங்குவைத் தடுக்க அரசு பள்ளிகளில் நிலவேம்பு கசாயம்

போடி, நவ. 15: போடி அருகே போ.மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியியிலும், தர்மத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேல சொக்கநாதபுரம் நிர்வாக செயல் அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்து நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். தொடர்ந்து சுமார் 600 மாணவ மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் அறிவொளி, வட்டார மேற்பார்வையாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : government schools ,
× RELATED சென்னையில் இணையவசதியுடன் 200...