×

திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி

காளையார்கோவில், நவ.15: காளையார்கோவிலில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காளையார்கோவிலில் உள்ள சுகந்தவன பெருமாள் கோவில் கலையரங்கில் தமிழ் மன்றம், திருக்கானப்பேரூரார் கலைக்களஞ்சியம் இணைந்து மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் முற்றோதல் விழா நடைபெற்றது.  விழாவிற்கு தஞ்சாவூர் நாவலர் வேங்கடசாமி நாட்டார், திருவருள் கல்லூரி செயலர் கலியப்பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக தலைமை ஆசிரியர் கழக செயலர் புலவர் நாகேந்திரன், காளையார்கோவில் முன்னாள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தனுக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காளையார்கோவில் தமிழ் மன்ற தலைவர் புலவர் காளிராசா வரவேற்றார்.

தஞ்சை கந்தசாமி, ஜெயங்கொண்டான், காத்தமுத்து, ஆனந்தராமன், கருப்பையா, முத்தையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவிற்கு காரைக்குடி வள்ளுவர் பேரவை தலைவர் ஜெயங்கொண்டான் நெறியாளராக இருந்தார். மூன்றரை மணிநேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தனர். குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருக்கானப்பேரூரார் கலைக்களஞ்சியம் நிறுவனர் அமுதசுரபி நன்றி கூறினார்.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்