திருக்கழுக்குன்றம், நவ. 15: காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அமமுக புதிய நிர்வாகிகள் அண்மையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான அறிமுக கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தருமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மதிகன்னியப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜி. கே.பாபு, ராஜலட்சுமி தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
இதில் சிறப்பாளராக கலந்துக் கொண்ட மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்தர் தேவகிருபையையும், சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் நபில், ஐ.டி. பிரிவு மகளிர் அணி செயலாளர் சௌதன்யா, ஐ.டி.ஆடவர் அணி செயலாளர் அருண்பிரசாத், பொறியாளர் அணி ராஜ நாராயணன், இளைஞர் பாசறை சுபாஷ் ஆனந்து, இளம் பெண்கள் பாசறை சுமதி பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மேலும் வரும் 18ம் தேதி திருப்போரூரில் தமிழக அரசை கண்டித்து நடக்கவிருக்கும் உண்ணா விரத போரட்டத்தில் கட்சியின் துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ள உள்ளதால் அமமுகவினர் பெருமளவு கலந்து கொள்ள வேண்டுமென்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.