×

ஒரகடத்தில் உள்ள யமஹா ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை, நவ. 15:  காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கு தொழிற்சாலையில் தொழிசங்கம் துவங்கியதால் 2 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்தது யமஹா நிர்வாகம். இதனால் தொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 9ம் தேதி அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது இந்நிலையில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 2மணியில் இருந்து நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது

கலெக்டர் பொன்னையா முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சிஐடியு பொதுசெயலாளர் சௌந்தரராஜன் யமஹா நிர்வாகம் சார்பில் 3 பேர் பங்கேற்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலாளர்களை யமஹா நிர்வாகம் மீண்டும் பணியில் அமர்த்துவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து நாளை மறுநாள் 16 ம்தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 700-தொழிலாளர்களும் பணிக்கு செல்வார்கள். இதையடுத்து தொழிலாளர்களின் 55 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags : Yamaha ,fight ,Oragadam ,
× RELATED தைவான் நாட்டை சேர்ந்தவர் மர்ம சாவு