புதுக்கோட்டை, நவ.14: புதுகையில் ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் குளிர்சாதனங்கள் பழுது சரி செய்வதற்கான இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் சரண்யா வெளியிட்டுள்ள அறிக்கை: கிராமப்புறத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இருபால் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ‘குளிர்சாதனங்கள் பழுதுபார்த்தல் பயிற்சி” குறித்து 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் சேர விரும்பும் 18 வயது முதல் 40 வயதும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் மகளிர் 3 புகைப்படங்கள், மதிப்பெண் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் போன் எண் ஆகியவைகளைக் குறிப்பிட்டு வரும் 30ம் தேதிக்குள், நிலைய இயக்குநர், ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், 1506/2, மேல 4ம் வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.