×

பாலகிருஷ்ணாபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

அறந்தாங்கி, நவ.14: அறந்தாங்கி அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் துவக்கி வைத்தார்.அறந்தாங்கியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதன், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏ மெய்யநாதன் கோரிக்கையை ஏற்று நேற்று காலை வட்டார மருத்துவ அலுவலர் முகமதுஇத்ரீஸ் தலைமையில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். தொடர்ந்து மருத்துவர்கள் முகமதுஇத்ரீஸ், கவின்குமார், தமிழமுது மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். மேலும் அப்பகுதி முழுவதும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. முகாமில் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக பொருளாளர் சண்முகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உத்தமநாதன், திமுக நிர்வாகிகள் கருப்பையா, பழனிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Tags : Special Medical Camp ,Balakrishnapuram ,
× RELATED திண்டுக்கல்லில் தேர்தல் விதிமீறி சின்னம் வரைந்த 5 பேர் மீது வழக்கு