×

மின்விளக்குகள் இல்லா மேம்பாலம் டென்மார்க் அனுப்புவதாக மோசடி செய்தவர் கைது

சிவகங்கை, நவ. 14: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (53). இவர் காரைக்குடி அருகே கானாடுகாத்தானை சேர்ந்த அழகப்பன் உள்பட 5 பேரிடம் கடந்த 2016ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்தை டென்மார்க் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி வாங்கியுள்ளார். ஆனால் கூறிபடி அனுப்பவில்லை. பணத்தை திருப்பி கேட்டதற்கும் கொடுக்கவில்லை. இதுகுறித்து அழகப்பன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சாதுரமேஸ், எஸ்ஐ அருள்மொழிவர்மன் ஆகியோர் பாண்டீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பாண்டீஸ்வரன் ஏற்கனவே ஜார்ஜியா அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் சிறையில் உள்ளார்.

Tags : fraudster ,Denmark ,
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...