நத்தம், நவ. 14: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதியில் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இங்குள்ள கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.