×

தீபாவளி பணம் கிடைக்காமல் விடுபட்ட 13 ஆயிரம் ரேசன் கார்டுகளுக்கு விரைவில் பணம் வழங்கப்படும்

புதுச்சேரி,  நவ. 14: தீபாவளி பணம் கிடைக்காமல் விடுபட்ட 13 ஆயிரம் ரேசன் கார்டுகளுக்கு  விரைவில் அவர்களது குறைகள் சரிசெய்யப்பட்டு பணம் வழங்கப்படும் என்று  குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் அறிவித்துள்ளார்.  புதுவை அரசின்  தீபாவளி பணம் வங்கிக் கணக்கில் கிடைக்கப் பெறாதவர்கள் குடிமை பொருள்  வழங்கல் துறை அலுவலகத்தை 12ம்தேதி முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார்  அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
  புதுவை அரசு குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து குடும்ப  அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி,  சர்க்கரைக்கு பதிலாக பணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்  கணக்கில் செலுத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 3,42,173 அட்டையில் 3,28,857  அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 13,316 அட்டைதாரர்களுக்கு குடும்ப தலைவர் இறப்பு, குடும்ப தலைவர்  மாற்றம், ஆதார் எண் பதிவு, வங்கிக் கணக்கு பதிவு உள்ளிட்ட காரணங்களால் பணம்  செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் அனைத்து குறைபாடுகளும்  துறை மூலம் சரிசெய்யப்பட்டு அனைத்து அட்டைதாரர்களுக்கும் வங்கிக் கணக்கில்  பணம் செலுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று  குறிப்பிட்டுள்ளார்.

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...