×

பேரூராட்சி வாகனங்களில் பேட்டரிகள் திருட்டு

குஜிலியம்பாறை, நவ. 12: பாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான 3 வாகனங்களில் பேட்டரிகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமாக  டிராக்டர், 3 வீல் ஆட்டோ, 4 வீல் ஆட்டோ ஆகிய 3 வாகனங்கள் உள்ளன. வேலை நேரம் முடிந்த பின் டிரைவர்கள், நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று காலை வாகனங்களை எடுக்க வந்தனர். அப்போது 3 வாகனங்களும் ஸ்டார்ட் ஆகவில்லை. இதுகுறித்து பார்த்தபோது 3 வாகனங்களிலும் பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து செயல்அலுவலர் செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருடுபோன 3 பேட்டரிகளின் மதிப்பு ரூ.17 ஆயிரம் ஆகும்.

Tags : Theft ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...