×

பொன்னமராவதி அருகே சாலைசீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னமராவதி, நவ.8: பொன்னமராவதி அருகே சொக்கநாதபட்டி- கங்காணிப்பட்டி சாலைப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் இருந்து சொக்கநாதபட்டி, கங்காணிப்பட்டி வழியாக மறவாமதுரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு செல்ல முடியாதபடி மிகவும் மோசமாக கிடந்தது. இந்த சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த சாலையை புதுப்பித்து தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக சாலை ஓரங்களில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது.. பழைய தார்சாலை பறிக்கப்பட்டது. ஆனால் புதிய சாலை போடப்படாமல் கிடப்பில் கிடக்கின்றது. இதனால் இவ்வழியாக செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : Ponnaravaradi ,
× RELATED பொன்னமராவதி பேருந்து நிலையத்தில்...