×

வாகனம் மோதி பூ வியாபாரி பலி

ஜெயங்கொண்டம் அருகே திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்(50). இவர் நேற்று பூ வியாபாரத்திற்காக காடுவெட்டியிலிருந்து பாப்பாக்குடி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவ்வழியே சென்றவர்கள் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்தின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். விவசாயிக்கு அரிவாள் வெட்டு : அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐயாறு (45). இவருக்கும் உறவினரான அதே பகுதியை சேர்ந்த தனபால் (50) என்பவருக்கும் சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஐயாறுவை அரிவாளால் தனபால் வெட்டினார். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், காயமடைந்த ஐயாறு, தனபாலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிகின்றனர்.



Tags : florist ,
× RELATED பூக்கடை பகுதியில் அடுக்குமாடி...