×

ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல், நவ. 8: திண்டுக்கல்லிலிருந்து ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் உள்ள குட்செட்டில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி ஏற்றினர். பின்னர் லாரி நாகல்நகர் மேம்பாலத்தில் இறங்கி வந்தது. அப்போது அதிக பாரம் தாங்காமல் லாரியின் முன் டயர் வெடித்து, லாரி கவிழ்ந்து. இதனால் பாலத்தின் சிமென்ட் சுவர் இடிந்து விழுந்தது. பொதுமக்கள் அப்பகுதியில் இல்லாததால் உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தெற்கு போலீசார், லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...