×

சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலம்

சுசீந்திரம், நவ. 8:  சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
இதைக்கண்ட பொதுமக்கள் சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் நாகர்கோவில் அருகே வட்டவிளையை சேர்ந்த விஷேக்(45) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இரு தினங்களுக்கு முன் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் திரும்பி வரவில்லை. அவர் ஜட்டி மட்டும் அணிந்திருந்ததால் குளிக்க வந்த இடத்தில் கால் தவறி குளத்தில் விழுந்திருக்கலாம் எனவும், இதில் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீசார் கருது கின்றனர்.

Tags : Susindram Temple ,
× RELATED சுசீந்திரம் கோயில் தேர்களுக்கு...