சீர்காழி,நவ.2: சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெற்பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தாசில்தார் சங்கர் தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் பாபு முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன் வரவேற்றார். தாசில்தார் சங்கர் திருவெண்காடு, கீழையூர். மணிக்கிராமம், ராதாநல்லூர், மங்கைமடம், நாங்கூர், பெருந்தோட்டம், திருநகரி, வானகிரி, கீழசட்டநாதபுரம், மேலையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சிட்டா அடங்கலை வழங்கினார்.