×

கல்லட்டி மலைப்பாதையில் செல்ல அனுமதியளிக்க வலியுறுத்தல்

ஊட்டி, நவ. 2: நீலகிரி மாவட்ட மேக்சி கேப் வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் மேல் நோக்கி வர அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு நிர்வாகிகள் ேகாவர்தன், குருமூர்த்தி் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபர்கள் மீதும், தனியார் வாகனங்கள் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதையும் தடுக்க வேண்டும். ஊட்டி மேக்சிகேப் வாகனங்கள் மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மேல் நோக்கி வருவதற்கு ேபாலீசார் அனுமதிப்பதில்ைல.

இதனால், சுற்றுலா பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ேமக்சிகேப் வாகனங்கள் மட்டும் கல்லட்டி மலைப்பாைதயில் ேமல் ேநாக்கி வர அனுமதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 12ம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி.,யிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா கார் மற்றும் மேக்சிகேப் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிைமயாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Kallatti ,
× RELATED கல்லட்டி மலை பாதையில்...