×

ஸ்காட்லாந்து பெண்ணை கரம்பிடித்த கோவை வாலிபர்

கோவை, நவ. 2: கோவை வாலிபருக்கும் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் கலாச்சாரப்படி கோவையில் திருமணம் நடந்தது. கோவை பூண்டி செம்மேடு பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, வெள்ளையம்மாள் தம்பதியின் மகன் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவர், 2008ல் ஸ்காட்லாந்தில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இவர் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த அலிஷியா டெய்லர்(26) என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஸ்காட்லாந்தில் கடந்த ஜூலை 27ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து தமிழ்காலசாரபடி, தன் பெற்றோர் முன் திருமணம் நடத்த சிவகார்த்திகேயன் முடிவு செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 22ம் தேதி ஸ்காட்லாந்தில் இருந்து தம்பதிகள் இருவரும் கோவை வந்தனர். பின்னர், கோவை செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோயிலில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிவகார்த்திகேயன்-அலிஷியா டெய்லர் திருணம் தமிழ் கலாசாரத்தின்படி நடந்தது. இவர்கள், தீபாவளி பண்டிகைக்கு பின் ஸ்காட்லாந்து செல்லவுள்ளனர்.

Tags : Coimbatore ,Scotland ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...