×

கோபி அருகே 20 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

கோபி,நவ.2:கோபி அருகே தோட்டத்து குடிசையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.  கோபி அருகே உள்ள நஞ்சை கோபி ஊராட்சிக்குட்பட்ட குட்டை தோட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து மது விலக்கு பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் நஞ்சை கோபியை சேர்ந்த சின்னச்சாமி என்கிற காளீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று சோதனை செய்தனர். அப்போது தோட்டத்து குடிசையில் 20 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சாராய ஊறலை பதுக்கிய சின்னச்சாமி மற்றும் பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம்(56) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags : liters ,Kobe ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை