×

கடையத்தில் மணல் கடத்தியவர் கைது டிராக்டர் பறிமுதல்

கடையம், நவ. 2:  கடையம் ராமநதி ஆற்றில் மணல் அள்ளிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் சாலையில் எஸ்ஐ சுரேஷ் தலைமையில் போலீசார் நவாப்ஜான், விக்னேஷ் ஆகியோர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள நெடுங்காவல் உடையார் சாஸ்தா கோயில் அருகே மணலுடன் வந்த டிராக்டரை மடக்கினர். அப்போது அதில் இருந்த ஒருவரை போலீசார் மடக்கினர். இருவர் தப்பியோடினர்.

விசாரணையில் பிடிபட்டவர், தெற்குகடையம் பாரதி நகரை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் முருகன் (38) என்பதும், ராமநதி ஆற்றில் அனுமதியின்றி மணல் திருடி வந்ததும் தெரியவந்தது. தப்பியோடியவர்கள் வாகைகுளத்தை சேர்ந்த சீதாராமன், தெற்கு கடையம் நடுத்தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ராஜேந்திரன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து முருகனை கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சங்கரன்கோவிலில் வணிகர் தின விழா