பள்ளிப்பட்டு, நவ.2: ஆர்.கே.பேட்டை அருகே காளிகாபுரம் கிராம முட்புதரில் சிலை ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள சனீஸ்வரர் கற்சிலை மீட்டனர். இந்த சிலையை கிராம நிர்வாக அலுவலர் பாண்டியனிடம் போலீசார் ஒப்படைத்தனர். அச்சிலையை பள்ளிப்பட்டு வட்டாட்சியர் விமலாவிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார்.