×

தாரமங்கலத்தில் கவனிக்க யாரும் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை

தாரமங்கலம், நவ.1:  தாரமங்கலத்தில், கவனிக்க ஆட்கள் இல்லாத விரக்தியால் வயது முதிர்ந்த தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த சின்னகாடம்பட்டியை சேர்ந்தவர் முத்துகவுண்டர் (90). இவரது மனைவி நல்லம்மாள் (80). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராஜா வெளியூரில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். 2வது மகன் நாகராஜ் சின்ன காடம்பட்டியிலேயே குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், வயது முதிர்வு காரணத்தாலும் கவனிக்க ஆட்கள் இல்லாததாலும் முத்துகவுண்டர், நல்லம்மாள் ஆகியோர் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதிகள் இருவரும் வீட்டில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட தம்பதியினரின் சடலத்தை கைப்பற்றி சேலம், அரசு மருத்துவமனைக்கு பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags : no one ,Tharamangalam ,
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...