×

குந்தா பகுதியில் நீர் பனிப்பொழிவு

மஞ்சூர்,நவ.1: குந்தா பகுதியில் நீர் பனிப்பொழிவால் கடும் குளிர் வாட்டுகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் கடந்த ஜூன் மாதம் துவங்கி கடந்த 4மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக வறட்சியின் தாக்கம் அறவே இல்லாததால் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் ஓரளவு செழிப்புற்று காணப் பட்டது. இந்நிலையில் குந்தா பகுதியில் தற்போது நீர் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. குந்தாவை பொருத்த மட்டில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு பின்னரே பனி விழத்துவங்கும்.

Tags : area ,Kunda ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...