×

வி.சி.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு, நவ. 1:  ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிறுத்தைவள்ளுவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத்தின் மண்டல அமைப்பு செயலாளர் சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பழனிச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி சித்திக், நாம் தமிழர் கட்சி லோகுபிரகாஷ், இந்திய குடியரசு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.   இந்த போராட்டத்தில் ஈரோட்டில் டாக்டர் அம்பேத்கருக்கு சிலை வைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் அரங்கமுதல்வன், மாவட்ட துணை செயலாளர் அக்பர்அலி, மாவட்ட பொருளாளர்கள் வீர துரைசாமி, விஜயபாலன், பெரியகாளையன், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் ரேவந்த், தொண்டரணி அமைப்பாளர் ஆட்டோ பாஸ்கர், பொன்னையன், மகளிரணி நிர்வாகிகள் மஞ்சு, சித்ரா, ஒன்றிய செயலாளர் தங்கராசு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : VCC ,hunger strike ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரையில் இன்று திமுக உண்ணாவிரத போராட்டம்