×

குளித்தலை விஏஓவினர் உபயோகமற்ற மடிக்கணினி தாசில்தாரிடம் ஒப்படைப்பு

குளித்தலை, நவ.1:குளித்தலை ஒன்றியத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் உபயோகமற்ற மடிக்கணினியை தாசில்தாரிடம் நேற்று ஒப்படைத்தனர். உபயோகமற்ற மடிக்கணினி சிம்கார்டு பதிலாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் புதிதாக வழங்க வேண்டும் என்பதை அரசு கவனத்திற்கு ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு கிராம அலுவலர் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மடிக்கணினியையும், சிம்கார்டையும் தாசில்தாரிடம் நேற்று காலை ஒப்படைக்க சென்றனர். அப்போது தாசில்தார் இல்லாததால் தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியின்போது கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட அமைப்பு செயலாளர் வரதராஜன், காளியப்பன், ராமதாஸ், அலிமா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Bathroom VOOVer ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...