×

கரூர் மாவட்ட நீதித்துறையில் தற்காலிக காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு நவ.16ம் தேதி கடைசி

கரூர், நவ.1: கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 (தற்காலிக பணியிடங்கள்), முதுநிலை கட்டளை பணியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர், மசால்சி, இரவுக்காவலர் மசால்சி, பதவிகளை நிரப்பிட தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் வயது, கல்வித்தகுதி, விண்ணப்படிவம், மற்றும் அனைத்து விதமான விபரங்களும் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தகுதியான நபர்கள் மட்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்தோடு இணைத்து நீதிமன்ற அலுவலகத்திற்கு ஒப்புதல் அட்டையுடன்கூடிய பதிவுத் தபாலில் நவ.16ம் தேதி மாலை 5.45மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பக் கேட்டக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...