×

ஓட்டலில் இயங்கிய மதுக்கடைக்கு சீல்

வில்லியனூர், நவ. 1: வில்லியனூரில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஓட்டலில் இயங்கிய மதுக்கடைக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.வில்லியனூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 200 மீட்டருக்குள் வில்லியனூர் மேலண்டை வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் மறைமுகமாக மதுக்கடை இயங்கி வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டாக அரசுக்கு தெரியாமல் இயங்கி வந்த மதுக்கடை குறித்து தற்போது கலால் துறைக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை ஆணையர் தயாளன் உத்தரவின்பேரில் தாசில்தார் அருண் அய்யா தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு மதுக்கடை இயங்கி வந்தது தெரியவந்தது. முன்னதாக கலால்துறையினர் ரெய்டு வருவது தகவல் அறிந்த ஓட்டல் நிர்வாகம் மதுக்கடையை மூடிவிட்டது. இதனை தொடர்ந்து தாசில்தார் மதுக்கடைக்கு சீல் வைத்துவிட்டு மீண்டும் மதுக்கடை இயங்கினால் நிர்வாகம் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags : bartender ,cafe ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...