உடன்குடி, நவ. 31: உடன்குடி பஸ் நிலையத்தில் தாய்மார்கள், பாலூட்டும் அறை உள்ளது. இதனருகே நேற்று முன்தினம் மாலை சுமார் 70 வயது மதிக்கதக்க முதியவர் பிணமாக கிடந்தார். நீலநிற கோடு போட்ட சட்டை மற்றும் லுங்கி அணிந்துள்ள அவர், இப்பகுதியில் சுற்றித் திரிந்து யாகசம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.