×

முத்தையாபுரம் அருகே பெயின்டர் தற்கொலை

ஸ்பிக்நகர், நவ. 1: முத்தையாபுரம் அருகே உள்ள தங்கமாள்புரத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் மாரிமுத்து (32), பெயின்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மாரிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் மனைவி புஷ்பலதாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புஷ்பலதா கடந்த ஒரு மாதமாக தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாரிமுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Painter ,suicide ,Muthiyapuram ,
× RELATED தூத்துக்குடி, முத்தையாபுரம்...