×

நெல்லை நகைக்கடையில் திருடிய பிரபல கொள்ளையன் கைது

நெல்லை, நவ. 1: நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் மணிகண்டன் (35). டவுன் மேல ரதவீதியில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே செங்கோல் முடுக்கு தெருவில் மதுரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் சங்கர் (33) என்பவர் பங்குதாரராக உள்ளார். கடந்த 24ம்தேதி இரவு இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், ஷோகேசில் இருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும். இதுதொடர்பாக டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.   கொள்ளை நடந்த நகைக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் 10 நாட்கள் பதிவான காட்சியை வைத்து அந்த பகுதியில் உள்ள நகை புரோக்கர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தாழையூத்து அருகே உள்ள அருகன்குளம் மேலூரைச் சேர்ந்த மாயாண்டி மகன் கணேசன் (35) உள்ளிட்ட 4 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் நகை அடகு வைக்க வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர். கணேசன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.   இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ நகையை மீட்டனர்.

Tags : pirate ,
× RELATED தமிழக மீனவர்கள் மீதான இலங்கை...