×

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

விருதுநகர், அக். 31: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஏழாயிரம்பண்ணை கிராம மக்கள் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏழாயிரம்பண்ணையில் உள்ள எம்ஜிஆர் நகரில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நகர் வழியாக பட்டாசு ஆலைக்கு கிராமமக்கள் சென்று வருகின்றனர்.  இந்நிலையில், எம்ஜிஆர் நகரில் டாஸ்மாக் கடை அமைத்தால் தேவையற்ற பிரச்னை ஏற்படும். எனவே, வேறு இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், மக்கள் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தி, உயர்நீதிமன்றத்தை நாடுவோம்’ என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Tasmual Store ,
× RELATED டாஸ்மாக் கடை திறக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு