×

சேலம் மண்டல ஐஓசிஎல் பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுத்திறன் போட்டி

சேலம், அக்.30: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சேலம் மண்டல பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்குகிறது. இதற்கான தொடக்க விழா, குரங்குச்சாவடி அருகில் உள்ள ஐஓசிஎல் பெட்ரோல் பங்கில் நேற்று நடந்தது. ஐஓசிஎல் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், போட்டியை தொடங்கி வைத்து  வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்களை வழங்கினார். ₹200க்கு மேல் பெட்ரோல்  நிரப்பிய டூவீலர்களுக்கும், ₹ஆயிரத்துக்கும் மேல் பெட்ரோல் நிரப்பிய  கார்களுக்கும் அறிவுத்திறன் போட்டிக்கான கூப்பன் வழங்கப்பட்டது.
விழாவில், சேலம் மண்டல துணை பொது மேலாளர் பழனிக்குமார், சீனியர் மேலாளர்கள் அப்பண்டிராஜன், சரத்பாபு, ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். 8 பகுதிகளில் நடைபெறும் போட்டியில் 72 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதில், ஒரு பகுதிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, ₹1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படுகிறது. விழாவில், முதன்மை பொதுமேலாளர் கோபால கிருஷ்ணன் பேசுகையில், ‘ஐஓசிஎல் பெட்ரோல் பங்குகளில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிவுத்திறன் போட்டிக்கான கூப்பன் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படுகிறது. டீலர்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செயல்பட்டு விற்பனையை அதிகரிக்க வேண்டும்,’ என்றார். முன்னதாக மேஜிக் ஷோ நடந்தது.

Tags : customers ,IOCL ,
× RELATED வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை ரூ.2.50 குறைப்பு