பட்டுக்கோட்டை, அக். 30: பட்டுக்கோட்டை அடுத்த சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பள்ளி தாளாளர் சுவாமிநாதன் திறந்து வைத்தார். செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் பள்ளி இயக்குனர்கள் ராமையா, கோபாலகிருஷ்ணன், ரத்தினக்குமார், ராஜமாணிக்கம், மோகன், டாக்டர்கள் கவுசல்யா ராமகிருஷ்ணன், கண்ணன், பிரசன்னா வெங்கடேஷ், தலைமை ஆசிரியர்கள் முகமது அக்பர்அலி, நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் கவுசல்யா, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஜெயசித்ரா ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினர். கண்காட்சியை ஏனாதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பள்ளி நிர்வாகிகள் பரிசு வழங்கினர். தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சை மஹாராஜா சில்க்சில் வாடிக்கையாளர்கள் ஜவுளிகளை தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்.