×

பொன்னமராவதி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பணிகள் முடிந்து பல மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராத பூங்கா

பொன்னமராவதி,அக்.30: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பணிகள் முடிந்தும் பயன்பாட்டுக்கு பூங்கா திறக்கவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அம்மா பூங்கா துவங்கப்படும் என்று அறிவித்து ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு இடத்தில் இதை அமைப்பதற்கு ஆணையிட்டார். இதன் அடிப்படையில் பொன்னமராவதி ஒன்றியத்துக்கான அம்மா பூங்கா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. இதில் ஜிம், கல் இருக்கைகள், உடற்பயிற்சி தளம்,

மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பூங்கா பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் முடியும் தருவாயில் கடந்த ஜூலை மாதம் கலெக்டர் ஆய்வு செய்து விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினார். ஆனால் அனைத்து பணிகளும் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூங்கா உள்ளது. எனவே பூங்காவை விரைந்து திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : park ,office complex ,Ponnaravarathi Union ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில்...