×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு புதுகையில் நவ. 4ம் தேதி நடக்கிறது

புதுக்கோட்டை, அக். 30: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை தேடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கடந்த 3 மாதங்களாக நடத்தி வந்துள்ளது.
தற்போது தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

மன்னர் கல்லூரி, மாவட்ட தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கான மாதிரி தேர்வை வருகிற 4ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடத்த உள்ளனர். இந்த தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தேர்வில் பங்கேற்று பயனடைய விருப்பம் உள்ள அனைவரும் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள ஆதாரத்துடன் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : TNPCC ,
× RELATED குரூப் 1 முதல்நிலை தேர்வில் தப்பு...