×

மொபட் பெட்டியை திறந்து ₹1லட்சம் கொள்ளை

திருநின்றவூர், அக்.31: ஆவடியை அடுத்த திருநின்றவூர், கிழக்கு அண்ணாநகர், திலகர் முதல் தெருவை சேர்ந்தவர் சேமநாதன் (71). ஓய்வு பெற்ற ஆசிரியர்.  இவர் நேற்று மதியம் ஏழு சவரன் நகைகளை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு  மொபட்டில்  திருநின்றவூர், சி.டி.எச் சாலையில்  உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார். அங்கு நகைகளை அடமானம் வைத்து ₹1.10 லட்சம் பெற்றார். அதனை மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். மொபட்டை வீட்டுக்கு வெளியே நிறுத்தினார். வீட்டுக்குள் சென்று மனைவியை அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது மொபட் பெட்டி திறந்து கிடந்தது.  அதில் இருந்த பணத்தை காணவில்லை.  புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

Tags : robbery ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...